×

சூலூர் பிரிவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை, பிப்.17: சூலூர் பிரிவு சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். கோவை அவினாசி சாலை சூலூர் பிரிவில் இருந்து குரும்பபாளையம் அருகே முத்து கவுண்டன் புதூர் வழியாக திருச்சி சாலையை சென்றடையலாம். இந்த சாலை, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருச்சி சாலையை இணைக்கும் மிக முக்கியமான சாலையாகவும் உள்ளது. இதனால், இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். மேலும், சூலூர் பிரிவில் இருந்து குரும்பபாளையம் முத்து கவுண்டன் புதூர் வரை ஏராளமான ஆக்கிரமிப்புகளும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் உள்ளன.

இதுதொடர்பாக, நுகர்வோர் அமைப்பினர் சென்னையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் மற்றும் கோவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு அனுப்பியிருந்தனர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் வாகனம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.  மேலும், ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகாத வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

Tags : Removal ,Sulur ,section road ,
× RELATED சூலூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து