×

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தோகைமலை, பிப். 16: கரூர் மாவட்டம் நேரு யுவகேந்திரா மற்றும் தோகைமலை ஊராட்சி மன்றம் சார்பாக மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினி கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் நல அலுவலர் பிரிஜெஸ் கவுசிக் முன்னிலை வகித்தார். இதில் மழைநீர் சேமிப்பதன் அவசியம் , இதனால் ஏற்படும் நன்மைகள், மழைநீர் சேமிக்க அரசு வழங்கும் வழிகாட்டுதல்கள், எந்ததெந்த பகுதிகளில் மழைநீரை சேமிக்க வேண்டும். சேமிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள்,சேமிக்க தேவைப்படும் பொருட்கள் உள்பட பல்வேறு தலைப்புகளில் நாடகம், விழிப்புணர்வு பாடல்கள், நடனம் வசனம் வாயிலாக வெளிப்படுத்தி பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் விழிப்புணர்வு கலைஞர்கள் பங்கேற்றனர். மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை திரளான மக்கள் கண்டுகளித்தனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...