×

பொன்னமராவதி அருகே ஊரணியில் மூழ்கி சிறுவன் பலி

பொன்னமராவதி, பிப்.16: பொன்னமராவதி தாலுகா அரசமலை சரகத்திற்குட்பட்ட மூலங்குடி வட்டம் மூலங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மகன் தென்னரசு (8). சிறுவன் தென்னரசு மூலங்குடி கிராமத்தில் உள்ள புது ஊரணியில் நேற்றுமாலை குடி தண்ணீர் எடுக்கச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சிறுவன் நீரில் மூழ்கினார். அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு மூலங்குடி வட்டம் கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...