திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் பஸ்சுக்கு செல்ல பணம் இல்லை என்று கூறியதுடன் தனது குடும்ப அட்டை காணாமல் போனது குறித்தும் கண்ணீர் மல்க மூதாட்டி பொன்னம்மாள் கூறினார். இதை கேட்ட அந்த பெண் போலீஸ், அவரை சமதானப்படுத்தி அவருக்கு சிறு தொகையை கொடுத்து உதவினார்.