×

கோணம் அரசு ஐடிஐ தங்கும் விடுதியை திறக்க மாணவர்கள் கோரிக்கை

நாகர்கோவில், பிப்.16: நாகர்கோவில், கோணம் அரசு ஐடிஐ மாணவர்கள் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கோணம் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயின்று வருகிறோம். எங்களுக்கு தொழில்பயிற்சி நிலையம் வகுப்புகள் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கான விடுதியை திறக்கவில்லை. நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த உன்னங்குளத்தில் வசித்து வருகிறோம். தினமும் ஐடிஐ வகுப்புக்கு வருவதற்கு தாமதம் ஆகிறது. வீடு திரும்புவதற்கும் தாமதம் ஆகிறது. நாள் ஒன்றுக்கு பஸ் கட்டணம் மட்டும் ரூ.200 செலவு ஆகிறது. அதனால் விடுதியை திறக்க வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியை திறக்க கேட்டு மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Government ,hostel ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...