தென்காசி, பிப்.16: தென்காசியில் பூங்கோதை எம்எல்ஏ கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது, தென்காசி தாலுகா கீழாம்பூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அதில் விவசாயிகள் யாரும் பயன்பெறவில்லை. தனிநபர்கள் வியாபாரிகளான மதுரையை சேர்ந்த 4 நபர்கள் விவசாயிகளை இடைத்தரகர்களிடம் நெல் விற்பனை செய்ய மிரட்டுகின்றனர். எனவே தற்போது கொள்முதல் நடைபெறும் இடத்தில் முறைகேடு நடப்பதால் வேறு இடத்திற்கு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றும்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் சமீரனிடம் பூங்கோதை எம்எல்ஏ தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமசிவன், சட்டநாதன், ஈஸ்வரன், மாடசாமி, ஹரிஹரன், கிருஷ்ணன், ஊர்க்காட்டான், சமுத்திரவேல் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.