×

கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு

கடையம்,பிப்.16:    கடையம் தங்கம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தராஜன். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு  சென்ற ஆடுகளில் ஒன்று வீடு திரும்பவில்லை. சுந்தராஜன் தேடி சென்றபோது கடையம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனையடுத்து அங்கிருந்த ராணுவ வீரர் மகேந்திரன், சுடலைமுத்து ஆகியோர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆட்டை மீட்டனர். பயன்பாட்டில்லாத கிணற்றுக்கு  மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Tags : well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...