×

டி.அய்யப்பபுரத்தில் நாளை மறுநாள் நடக்கிறது ஹனுமன் பீடத்தில் கூட்டு பிரார்த்தனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

கோவில்பட்டி, பிப். 16: கோவில்பட்டி அருகே உள்ள மருதன்வாழ்வு பஞ்சாயத்து டி.அய்யப்பபுரம் ஹனுமன் தியான பீடத்தில் நாளை மறுநாள் (18ம்தேதி)  நூதன ஆலய திருப்பணிக்கான சத்சங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் ரங்கம்-மன்னார்குடி செண்பகமன்னார் ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். அன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அய்யப்பபுரம் ஹனுமன் பீடத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பெரும் முயற்சி எடுத்து தருவித்த விக்கிரகங்களுக்கு சன்னதி அமைக்க (நூதன ஆலய திருப்பணி) கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆசி பெற்றுச்செல்லுமாறு ஹனுமன் தியான பீடம் முருகன் என்ற ராமபக்த ஆஞ்சநேய ராமானுஜதாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Kadampur Raju ,Hanuman Peetha ,D. Ayyappapuram ,
× RELATED இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணிக்காக...