×

அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கலையரங்கம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் காரணைப்புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ₹6 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காரணைப்புதுச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அமைத்து தரும்படி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனிடம், பள்ளி நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில், செங்கல்பட்டு எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ₹6 லட்சத்தில், பள்ளி வளாகத்தில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பத்மநாபன், டில்லிபாபு, ராஜேந்திரன், தமிழ்செல்வம், குணசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சூரியகலா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், தொழிலதிபர் ஆப்பூர் மதுசூதனன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார்.

Tags : Art Gallery ,Campus ,Government High School ,MLA Varalakshmi Madhusudhanan ,
× RELATED எனது ‘பலாப்பழம்’ சின்னம் சரியா தெரியலயே ஏன்? மன்சூர்அலிகான் வாக்குவாதம்