×

இலவச மின் இணைப்புபெற சிறப்பு நேர்காணல்

நாமக்கல், பிப்.16: நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கோட்ட அலுவலகத்தில் கடந்த 1.4.2000 முதல் 31.3.2003 வரை சாதாரன வரிசையில், விவசாய மின் இணைப்பு பெற 90 நாள் அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடுவிற்குள் தயார்நிலை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு, மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி இதற்கு முன்னர் எவ்விதமான விவசாயதிட்டத்திலும் விவசாய மின் இணைப்பு பெறாத பட்சத்தில் வரும் 17, 18 மற்றும் 19ம் தேதிகளில், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே, சாதாரண வரிசையில் விவசாய விண்ணப்பம் பதிவு செய்து தயார் நிலை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், உரிய ஆவணங்களுடன் சிறப்பு நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags : interview ,
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...