×

மழை பெய்தும் வறண்டு கிடக்கும் தடுப்பணை

தர்மபுரி, பிப்.16: தர்மபுரி அருகே அளே தர்மபுரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே, 2019ம் ஆண்டு ₹8.45 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன், நல்ல மழை பெய்தது. மழை பெய்தும் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்காததால், தற்போது வறண்டு கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடுப்பணைக்கு மழைநீர் வரும் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!