×

சிவகாசி அருகே வி.சி நிர்வாகி உட்பட 4 பேருக்கு கத்திக்குத்து

சிவகாசி, பிப். 16: சிவகாசி  அருகே  திருத்தங்கல் முத்துராமன் சந்து பகுதியை சேர்ந்தவர்  ராஜேஷ்கண்ணன்(40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தினேஷூக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தினேஷ் நேற்று ராஜேஸ்கண்ணன் கடை அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.  இரண்டு பேரின் ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் அசோக்குமார்(42), ராஜேஷ்கண்ணன்(40), கணேசன்(50), ஜெயவேல்முருகன்(40) ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த அசோக்குமார்  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருத்தங்கல் நகர துணைச்செயலாளராக உள்ளார்.

Tags : administrator ,Sivakasi ,
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில்...