×

புதிய நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி, பிப்.16: பரமக்குடியில் தேவேந்திர பண்பாட்டுக் கழக புதிய நிர்வாகிகள்  பொறுப்பேற்றுக் கொண்டனர்.  பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சார்பாக அமைக்கப்பட்டுள்ள தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டுறவு துறை அதிகாரி  பாலச்சந்திரன், ஆசிரியர் ஜேம்ஸ், வழக்கறிஞர்கள் விஜயகுமார், பிரபு ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக  பணியாற்றினர். பாலகிருஷ்ணன் தலைவராகவும், செல்வகுமார் செயலாளராகவும், சுதாகரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக அருண்குமார், ஜெயக்குமார், முருகன், நாகரத்தினம் ஆகியோரும், துணை செயலாளர்களாக குமார், சண்முகவேல், விஜயகுமார், காளிமுத்து, ராமகிருஷ்ணன் ஆகியோரும், 13 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட தலைவர் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும், எஸ்சி எஸ்டி அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து  அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : executives ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது