×

மொடக்குறிச்சி வாரச்சந்தையில் செயல்படும் மாட்டு இறைச்சி கூடத்தை அகற்ற கோரி மனு

ஈரோடு, பிப்.16: மொடக்குறிச்சி வாரச்சந்தையில் செயல்படும் மாட்டு இறைச்சி கூடத்தினை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஓலப்பாளையம் கருக்கன்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் கதிரவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மொடக்குறிச்சி வாரச்சந்தையில் வாரம் இரண்டு நாட்கள் மாட்டு இறைச்சி கூடம் செயல்படுகிறது. இதன் அருகே குடியிருப்பு, அரசு அலுவலக குடியிருப்பு, விளைநிலங்கள், அரசு நெல் கொள்முதல் நிலையம், ஒழுங்கு முறை விற்பனை கூடம் போன்றவை உள்ளன.

இறைச்சி கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்படாததால் அங்கிருந்து துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது. இதே கோரிக்கை, வேளாண் குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டு, அக்கடையை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இருப்பினும், சில ஆளும் கட்சியினர் துணையுடன் மீண்டும் செயல்படுகிறது. இக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : removal ,Modakkurichi Weekly Market ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...