×

புதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலி புதிதாக 20 பேருக்கு தொற்று

புதுச்சேரி, பிப். 16: புதுச்சேரியில் நேற்று புதிதாக 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 1,400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-16, காரைக்கால்-2,  மாகே-2 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், மூலக்குளம் திருநகரை சேர்ந்த 82 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 658 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39,468 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 52 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 38 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட மொத்தம் 236 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,574 (97.73 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 6,08,343 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,64,491 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை