×

குத்தாலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

மயிலாடுதுறை, பிப். 12: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் காவல் நிலையம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு பிரசார பயணம் நடந்தது. மயிலாடுதுறை ஆர்டிஓ நாகராஜன் தலைமை வகித்தார். விழிப்புணர்வு பிரசாரத்தை குத்தாலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அப்போது காரில் பயணிப்பவர் அனைவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும். வாகனத்தில் குழந்தைகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும். டிரைவர்கள் போதிய ஓய்வின்றி தொடர்ச்சியாக வாகனத்தை இயக்கக்கூடாது. மது அருந்தி விட்டு வாகனம் இயக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், குத்தாலம் சப் இன்ஸ்பெக்டர்
வெங்கடேசன் பங்கேற்றனர்.

Tags : Kuthalam ,
× RELATED கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாடி...