×

நூறுநாள் வேலை செய்த பெண்ணுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்காததை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

குளித்தலை, பிப்.12: குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் சாரதாம்பாள். இவர் 100 நாள் திட்ட வேலை செய்து வந்தார். இவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சாரதாம்பாள் குளித்தலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கணக்கு தொடங்கி வரவுசெலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இன்சூரன்ஸ் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்காமல் வங்கி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்ககோரி கடந்த 2.12.2020 அன்று போராட்டத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வங்கி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் உரிய காப்பீட்டு தொகையை தருகிறோம் என்று ஒப்புக்கொண்டது. ஆனால் இரண்டு மாதம் ஆகியும் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து வருகிற 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியகுழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Tags : protest ,
× RELATED அர்ஜெண்டினாவில்...