×

கரூர் சுங்ககேட் அருகே குடிநீர் குழாய் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், பிப்.12: கரூர் சுங்ககேட் அருகே நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை செல்லும் சாலையில் சுங்ககேட் நிழற்குடை அருகே குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக சாலையோரம் மெகா பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மற்ற வாகனங்கள் இந்த பகுதியின் வழியாக எளிதாக செல்ல முடியாத நிலையும், நிழற்குடை அருகே மக்கள் நிற்க முடியாத நிலையும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன்கருதி இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : completion ,drinking water pipeline ,Karur Customs Gate ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா