×

திருச்சியில் 10வது நாளாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 12: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் 10ம் நாளாக போராட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.

Tags : Government employees ,Trichy ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்