×

திருவாரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருவாரூர், பிப்.12: திருவாரூர் அருகே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரவுடி மகாராஜன் (32) என்பவர் கடந்த மாதம் 23ம் தேதி அவர் வீடு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி விஷ்ணுபிரியா வைப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் சரவணன் (29), அமமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன்(40) மற்றும் அவரது அண்ணன் குரும்பேரியை சேர்ந்த பிரபல ரவுடி அரவிந்தன்(46) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன் மற்றும் அவரது உறவினர்களான அதே ஊரை சேர்ந்த திலீபன்(20) மற்றும் சுதாகர்(21) ஆகிய மூவரும் திருச்சி லால்குடி கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் மணிகண்டனை போலீசார் கைது செய்த நிலையில் அரவிந்தனை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் மூலம் நேற்று திருச்சி அருகே துறையூரில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்ட அரவிந்தன் பின்னர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Rowdy ,Thiruvarur ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...