×

மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

மன்னார்குடி, பிப். 12: வடுவூர் தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி(22), விவசாய கூலி தொழிலாளியான இவர் 16 வயதுடைய மைனர் பெண்ணிடம் நெருங்கி பழகியதன் காரணமாக அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதையறிந்த இருதரப்பு உறவினர்களும் சேர்ந்து வீரமணிக்கும், அந்த மைனர் பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பகவதிசரணம் விசாரணை நடத்தி வீரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தார்.

Tags : Valipar Bokso ,
× RELATED இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீன்...