×

சாலைகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேராவூரணி, பிப்.12: பேராவூரணியில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி நகரில் முக்கிய சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். தூசி படலத்தை உருவாக்கி, சுவாச பிரச்னையை ஏற்படுத்தும். சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், சாலையை செப்பனிட்டு, புதுப்பிக்க வேண்டும். மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து, பாதசாரிகளுக்கு நடைமேடை அமைக்க வேண்டும். சாலையின் குறுக்கே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பிகள், மின்மாற்றிகளை உரிய இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

நகரில் உள்ள முக்கிய சாலைகளை இருவழிச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். திருவிழா, திருமண, மொய் விருந்து விழாக்காலங்களில் நகரில் நிலவும், போக்குவரத்து நெருக்கடிகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குமாவட்டக்குழு உறுப்பினர் வாசு தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி குமாரசாமி, சேதுபாவாசத்திரம் வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாணிக்கம், பாஸ்கரன், சிதம்பரம், ராஜாமுகமது, நகரக்குழு உறுப்பினர் ஜகுபர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,roads ,Marxist Communist Party ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...