×

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 10வது நாளாக தொடர்ந்தது

தஞ்சை, பிப்.12: புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தஞ்சாவூரில் கடந்த 2ம் தேதி முதல் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நேற்று 10வது நாளாக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் கோதண்டபாணி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ரெங்கசாமி மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags : protest ,government employees ,cancellation ,unions ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்