×

விண்ணப்பதாரர்களுக்கு 17ம் தேதி முதல் நேர்காணல்

புதுக்கோட்டை, பிப்.12: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 1.4.2000 முதல் 31.3.2003 வரை சாதாரண வரிசையில் புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வக்கோட்டை பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட விவசாய விண்ணப்பங்களில் தயார்நிலை பதிவு செய்யப்படாமல் உள்ள விண்ணப்பங்களுக்கு இதற்கு முன்னர் எந்தவிதமான விவசாய திட்டத்திலும் விவசாய மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் விண்ணப்பதாரர் நிலத்தின் தற்போதைய உரிமையாளர், சம்மத கடிதம் பெற்ற வாரிசுதாரர் ஆகியோர் நில உரிமைக்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் தமிழ்நாடு மின்உற்பத்தி செயற்பொறியாளரை (இயக்கலும் காத்தலும்), தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் சாதாரண வரிசை விண்ணப்பங்களுக்கான நேர்காணல் 17.2.2021, 18.2.2021 மற்றும் 19.2.21 ஆகிய தேதிகளில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : interview ,applicants ,
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி