×

தை அமாவாசையையொட்டி நாங்குநேரி பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு

நாங்குநேரி, பிப் 12: தை அமாவாசையையொட்டி நாங்குநேரி பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய்காப்பு திருவிழா நடந்தது. நாங்குநேரி பெருமாள் கோயிலில் தை அமாவாசையை  முன்னிட்டு ஒரு கோட்டை எண்ணெய் காப்பு விழா நடந்தது. இதையொட்டி  நேற்று முன்தினம்  சிறப்பு யாகபூஜை, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு  காலை கும்ப ஊர்வலம், சிறப்பு விஸ்வரூப தரிசனம் மற்றும் யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பெருமாளுக்கு ஒரு கோட்டை நல்லெண்ணெய் அபிஷேகமும், பெருமாளுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கார  தீபாராதனை, தீர்த்தம், திருமஞ்சன விநியோகம், பிரசாதம்  வழங்கப்பட்டது. மாலையில் பெருமாளுக்கு சந்தன காப்பு பூஜை, இரவு  பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.  இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : fort oil fort ,temple ,occasion ,Nanguneri Perumal ,Thai ,
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...