×

உவரி அருகே கடலில் தத்தளித்த அமலிநகர் மீனவர்கள் மீட்பு கேஆர்எம் ராதாகிருஷ்ணன் ஆறுதல்

திருச்செந்தூர், பிப். 12: படகு இயந்திர கோளாறினால் கடலில் தவித்து, மீட்கப்பட்ட அமலிநகர் மீனவர்களை அதிமுக ஜெ பேரவை மாவட்ட செயலாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த மீனவர்கள் விஜயபாஸ்கர்(38), ஸ்டீபன்(42), மணிவண்ணன்(48), பவித்ரன்(23) ஆகியோர் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மாலையில் அவர்கள் கரை திரும்பாததால் அமலிநகர், ஆலந்தலை மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். நேற்று காலை உவரி பகுதியில் படகு இயந்திர கோளாறினால் 4 மீனவர்களும் கரை திரும்ப முடியாமல் தத்தளித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை சக மீனவர்கள் படகில் சென்று மீட்டு வந்தனர். அவர்களை அதிமுக ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பங்குதந்தை ரவீந்திரன்பர்னாந்து, அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆறுமுகநேரி நகர செயலாளர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் நகர பொருளாளர் டிக்சன், கூட்டுறவு சங்க தலைவர் சுந்தர், வார்டு செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ேடார் உடனிருந்தனர்.

Tags : KRM Radhakrishnan ,fishermen ,Amalinagar ,Uvari ,sea ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...