தூத்துக்குடி, பிப். 12: தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பான சிறப்பு முகாம் நாளை (13ம் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் மனுதாரர் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மின்னணு குடும்ப அட்டை தேவைப்படுவோர் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று மனுக்கள் அளித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.