திருச்செந்தூர், பிப்.12: தை அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு அபிசேகம், 6.30 உதயமார்த்தாண்ட தீபாராதனை மற்றும் கால பூஜைகள் நடந்தன. காலை 8.40 மணிக்கு கோயிலில் இருந்து அத்திரதேவர் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.