ஓட்டப்பிடாரம், பிப். 12: ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதியம்புத்தூர் மேலமடத்தில் நடந்தது மகளிரணி மாவட்ட அமைப்பாளர் ஜெசி பொன்ராணி தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரமாக களப் பணியாற்றுவது, உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் மகளிரணி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஒன்றிய செயலாளர் இளையராஜா சேலை வழங்கினார். இதில் நிர்வாகிகள் முத்துக்குமார், லிங்கராஜ், வேல்ராஜ், அன்புராஜ், செல்வராஜ், போஸ், செல்வின், தங்கதுரைப்பாண்டி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.