ராசிபுரம், பிப்.12: ராசிபுரம் அடுத்த நாச்சிப்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 ஆயிரத்துக்vகும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டுறவு சஙங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய பாமகவினர் சென்றனர். ஆனால், தற்போது பதட்டமான சூழ்நிலை இருப்பதாக கூறி, தேர்தலை தள்ளி வைப்பதாக நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாமகவினர், தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க சென்றனர். ஆனால், கூட்டுறவு சங்க அதிகாரிகள் இல்லை. மேலும் இதுகுறித்து யாரும் பதில் கூறவில்லை. இதனை கண்டித்து, பாமகவினர் வேளாண் கூட்டுறவு சங்கத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.