×

வாகனம் மோதி முதியவர் பலி

சேந்தமங்கலம், பிப்.12: சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : vehicle collision ,
× RELATED வாகனம் மோதி மான் பலி