×

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

திருவில்லிபுத்தூர்,பிப்.12  திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் மகன் மோகன்(25). இவர் ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். பெற்றோர் திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. புகாரின் பேரில், நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு