×

கார் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலி

திருவில்லிபுத்தூர்,பிப்.12   திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஹவுஸிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் தளவாய் பாண்டியன்(49). முன்னாள் ராணுவ வீரரான இவர் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று தளவாய் பாண்டியனும், அவரது சகோதரர் சஞ்சீவி பாண்டியனும் வாக்கிங் சென்றனர். ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்த போது அவ்வழியே வந்த கார், தளவாய் பாண்டியன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த தளவாய் பாண்டியனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவரத மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின் ேபரில், வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரோபிஜெஸ்டஸை கைது செய்தனர்.

Tags : Army ,soldier ,car crash ,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...