×

டூவீலர்கள் மோதி இரண்டு பேர் பலி

கீழக்கரை, பிப். 12: திரு ப்புல்லாணி அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பருத்திக்காட்டுவலசை கிராமத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (62). விவசாயி. இவர் வைரவன்கோயில் பகுதியிலிருந்து டூவீலரில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார். திருப்புல்லாணி அருகே பூச்சிவலசை பகுதியில் முன்னாள் சென்ற டிராக்டரை கடந்து செல்ல முயன்றார். அப்போது எதிரில் வந்த மற்றொரு டூவீலர் எதிர்பாராதவிதமாக பால்பாண்டியின் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பால்பாண்டியும், மற்றொரு டூவீலரில் வந்த கரன் என்ற வாலிபரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்புல்லாணி போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : collision ,
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு..!!