×

3வது நாளாக ஆர்ப்பாட்டம்

சாயல்குடி, பிப்.12: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ, ஜியோ சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடர்ச்சியாக 3வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சங்க மாவட்ட தலைவர் குமாரவேல், ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் லியோஜெரால்டு முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகதுரை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி, ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை, தொகுப்பூதிய, மதிப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்