×

மேலூர் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் குற்றவாளிகள் கைது கோரி 4 வழிச்சாலையில் மறியல்

மேலூர், பிப். 12:  மேலூர் அருகே பேப்பனையன்பட்டியை சேர்ந்தவர்.  வெள்ளைச்சாமி (29). திருமணமாகி 3 மாதங்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் மேலூர் பூதமங்கலம் சாலையில் டூவீலரில் சென்ற போது இவரை வழிமறித்து ஒரு கும்பல் வெட்டி கொன்றது. சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஆடு திருட்டை போலீசில் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்பகை காரணமாக வெள்ளைச்சாமி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கீழவளவு போலீசார் அட்டப்பட்டி அய்யனார், பிரபு, தர்மர் மீது வழக்குப்பதிந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வெள்ளைச்சாமி குடும்பத்தினர், கிராமமக்கள் என 150 பேர் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் கைது செய்ய கோரியும், பாதிகக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலர் மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் நாவினிப்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags : arrest ,Melur ,murder ,Puthumappillai ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!