×

மரத்தில் இருந்து விழுந்தவர் சாவு

பாப்பாரப்பட்டி சின்னபங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் மாரி(60), மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியில் துரை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தேங்காய் பறிப்பதற்காக சென்றார். தென்னை மரத்தில் ஏறியபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து, பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு