×

திருவண்ணாமலையில் நள்ளிரவு துணிகரம்: கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு 2 வாலிபர்களுக்கு வலை

திருவண்ணாமலை, பிப்.12: திருவண்ணாமலையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 சவரன் தாலி செயினை பைக் ஆசாமிகள் பறித்து சென்றுள்ளனர். திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்தவர் குமரன்(37), வியாபாரி. இவரது மனைவி அபிராமி(32). இவர் நேற்று முன்தினம் திருக்கோவிலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, இரவு 11 மணியளவில் திருவண்ணாமலை திரும்பினார். திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து கணவர் குமரன், அபிராமி இருவரும் பைக்கில் வீட்டிற்கு சென்றனர்.

செல்வவிநாயகர் கோயில் அருகே சென்றபோது பின்னால் ஒரே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், குமரன் பைக் மீது மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறிய குமரன், வாலிபர்களிடம் தட்டிக்ேகட்டுள்ளார். அப்போது திடீரென 2 வாலிபர்களும், அபிராமி அணிந்திருந்த 7 சவரன் தாலி சரடை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து குமரன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பைக் ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,teenagers ,
× RELATED பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி