சென்னை: தி.நகர் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் உள்ள முப்பாத்தம்மன் கோயில் முகப்பில் 39 அடி உயரத்தில் புதிய ராஜகோபுரத்தை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.ராஜரத்தினம், ஆர்.ரேவதி ராஜரத்தினம், நிர்வாக இயக்குனர் ஆர்.சபாபதி ஆகியோர் நிர்மாணித்து அருட்கொடையாக வழங்கி, மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பணிகளையும் முன்னின்று நடத்துகின்றனர். ஆலய பிரதான சிவாச்சாரியார் காளிதாஸ் முன்னிலையில், வரும் 18, 19, 20 ஆகிய 3 தேதிகளில் நடைபெறும் மூலஸ்தான மூர்த்திகளின் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை, யாக பூஜைகள், கும்பம் புறப்பாடு, ஆலய பிரவேசம் மற்றும் அன்னதான பணிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள விநாயகர், முருகர், ஐயப்பன் சன்னிதானங்களும் புதுப்பொலிவுடன் புனரமைத்து, புதிதாக துர்கையம்மன் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மிக பணிகளை அர்ப்பணிப்புடன் செயல்படுத்தும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.ராஜரத்தினம் குடும்பத்தினருக்கு முப்பாத்தம்மன் ஆலய ஆதின தர்மகர்த்தா வேலுச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.