×

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரை நிர்வாணமாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்

திருப்பூர், பிப்.11: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 9வது நாளாக அரை நிர்வாணமாக, வயிற்றில் ஈரத்துணி கட்டி ஒப்பாரி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், மாநில செயலாளர் பரமேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 17.பி குற்ற குறிப்பானைகளை ரத்து செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 90 பெண்கள் உள்பட 130  பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : government employees ,road ,cancellation ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்