×

பாலிபேக் நிறுவன உரிமையாளர் கழுத்தறுத்து கொலை-பங்குதாரர் கைது

திருப்பூர்,  பிப். 11:  திருப்பூர் பாலிபேக் நிறுவன உரிமையாளரை கத்தியால் கழுத்தறுத்து  கொலை செய்த நிறுவன பங்குதாரரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர்  கலைஞர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (55). இவர் திருப்பூர்,  சிக்கண்ணா கல்லூரி பின்புறம் உள்ள காமாட்சிபுரம் 5வது தெருவில் தனது  குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், வைஷ்ணவி  என்ற மகளும் உள்ளனர். இவரும் புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை  தாலுக்காவை சேர்ந்த அரவிந்த் (27) என்பவரும் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம்  திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் பாலிபேக் நிறுவனத்தை துவங்கியுள்ளனர். அந்த நிறுவனத்திற்கான பங்கு தொகை ரூ.1 லட்சத்தை மூர்த்தி கொடுக்கவில்லை என  கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவருக்குமிடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு  குடிபோதையில் மூர்த்தி தனது நண்பரான சுரேஷ் என்பவருடன் அந்த நிறுவனத்திற்கு  சென்றுள்ளார். அங்கிருந்த அரவிந்திடம் மீண்டும் பணம் கொடுப்பது  குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஆத்திரமடைந்த அரவிந்த்  அங்கிருந்த கத்தியால் மூர்த்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது  குறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்து  சிறையிலடைத்தனர்.

Tags : company owner ,murder-partner ,
× RELATED திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை