×

மாவட்ட கவுன்சிலர் நிதியில் போர்வெல் அமைக்க பூமி பூஜை

மொடக்குறிச்சி, பிப். 11:  மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி நிதியின் கீழ் முள்ளாம்பரப்பில் போர்வெல் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.  மாவட்ட கவுன்சிலர் வளர்ச்சி நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட முள்ளம்பரப்பு புது காலனியில் போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குணசேகரன் தலைமையில் மாவட்ட கவுன்சிலர் யுவரேகா தனசேகர், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் தர்மலிங்கம், பெரியசாமி, கஸ்பாபேட்டை ஊராட்சி துணைத் தலைவர் முருகேசன், ஆறுமுகம், மொடக்குறிச்சி தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் குகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Puja ,Borwell ,
× RELATED உத்தமபாளையம் அருகே போர்வெல்...