×

பவானியில் வி.சி.க.வினர் சாலை மறியல்

பவானி, பிப். 11:  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மீதான தாக்குதலைக் கண்டித்து  பவானியில் வி.சி.க.வினர் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானி அரசு மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். இக்கட்சியின் நகர செயலாளர் முடியரசன் உள்பட 3 பேர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது. பொறியாளர் அணியின் மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.சாதிக், மொடக்குறிச்சி தொகுதி செயலாளர் மதிவாணன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரங்க முதல்வன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர் பவானி நாகராஜ், பெருந்துறை சட்டமன்ற தொகுதி செயலாளர் குணவளவன், ஒன்றிய செயலாளர் மணல் முரளி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு, கொடுமுடி ஒன்றிய செயலாளர் இளையராஜா, பவானி நகர பொறுப்பாளர் ரஞ்சித், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் நடராஜ், பவானி ஒன்றிய அமைப்பாளர் ஜம்பை பிரேம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சம்பவ இடத்துக்கு சென்ற பவானி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதோடு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பவானி அரசு மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : VCK ,Bhavani ,
× RELATED மோடியை விரட்டினால் தான் நமக்கு...