×

அருப்புக்கோட்டையில் மதிமுக சார்பில் பூத் ஏஜென்ட் கூட்டம்

அருப்புக்கோட்டை, பிப்.11: அருப்புக்கோட்டையில் மதிமுக நகர, ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. நகர மதிமுக செயலாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், வடக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக மாவட்டசெயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற மதிமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் 160 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என பேசினர். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி தாமோதரன், இலக்கிய அணி திருமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மாணவரணி அமைப்பாளர் வினோத் அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் நன்றி கூறினார்.

Tags : Booth ,agent meeting ,Aruppukottai ,
× RELATED பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையம்