×

சிவகாசி காளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

சிவகாசி, பிப். 11: சிவகாசி அருகே சிவகாமிபுரம் காளியம்மன் கோயில் பொங்கல், பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. சிவகாசி அருகே சிவகாமிபுரம் கிராமத்தில் 40ம் ஆண்டு பழமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் தை பொங்கல் திருவிழா மற்றும் பூக்குழி இறங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தை பொங்கல், பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும். பூக்குழி இறங்கியும், அக்கினி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Devotees ,flower pit ,Sivakasi Kaliamman Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...