×

சிவகாசி நகராட்சியில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் திட்டத்திற்கு பூமிபூஜை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்


சிவகாசி, பிப். 11: சிவகாசி நகராட்சியில் பல்வேறு இடங்களில் புதிய தார் ரோடு அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிவகாசி நகராட்சி 6 வது வார்டு நேருரோடு, 8வது வார்டு பழனியாண்டவர்புரம் காலனி குறுக்குத் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் ரூ. 27 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்து கூறுகையில், ``ரூ. 10 கோடியில் சிவகாசி நகராட்சியில் புதிய ரோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ரூ.27 கோடியில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை தற்போது துவக்கி வைத்துள்ளேன். இப்பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்கும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்’’ என்று கூறினார்.

சிவகாசி நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ராமலிங்கம், அதிமுக நகர செயலாளர்கள் அசன்பதுரூதீன், பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, தெய்வம், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிக்குமார், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், நாரணாபுரம் ஊராட்சி செயலாளர் மாரிக்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rajendrapalaji ,municipality ,Sivakasi ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...