×

சாலைப் பணிகளை திமுக எம்எல்ஏ ஆய்வு விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ராஜபாளையம், பிப். 11: ராஜபாளையம் நகரில் சங்கரன்கோவில் முக்கு முதல் ரயில்வே மேம்பாலம் வரை புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி ஜல்லிகளை பரப்பும் பணி முடிந்துள்ளது. இப்பணிகளை ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை முத்தீஸீவரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, ‘காந்தி கலைமன்றம் முதல் சங்கரன்கோவில் முக்கு வரை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், உடனடியாக சாலை அமைக்க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் வலியுறுத்தினார். மேலும், அந்த சாலையில் நடக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணி இன்னும் இரு தினங்களில் நிறைவடையும் என உறுதியளித்தனர். பின்ன சாலை ஒப்பந்ததாரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவில் சாலைப்பணியை முடிக்க வலியுறுத்தினார். இந்த நிகழ்வில், நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK MLA ,completion ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...