×

பிரசவத்திற்கு சென்றபோது ஆம்புலன்ஸில் பிறந்தது குழந்தை

ஆண்டிபட்டி, பிப்.11: ஆண்டிபட்டியில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது.ஆண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை அருகே கோட்டார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கெங்கையம்மாள்(27) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கெங்கையம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் கருப்பணன்  108 ஆம்புலன்சை அழைத்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே கெங்கையம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபு, மருத்துவ உதவியாளர் தங்கபாபு ஆகியோர் தாய்க்கும் குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : baby ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி