×

டூவீலர் மோதி தொழிலாளி பலி

மண்டபம், பிப்.11:  மண்டபத்தில் டூவீலர் மோதியதில் தொழிலாளி பலியானார். விபத்திற்கு காரணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர். மண்டபம் அம்பலக்கார தெருவை சேர்ந்த லாடமுத்து மகன் சோலை ராஜன்(38). கூலி தொழிலாளி. இவர் ரயில்வே குடியிருப்பு அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் மோதியதில் படுகாயமடைந்த சோலைராஜன், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். டூவீலரை ஓட்டிச் சென்ற மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த ஜோதி மகன் ஜெகதீஷ்(24),  பின்னால் இருந்த சிங்காரத்தோப்பு மச்சக்காளை மகன் மணி(21) மற்றும் தருண் காயமடைந்தனர். இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய ஜெகதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : collision ,
× RELATED தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்; ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி