×

கலாம் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி

ராமேஸ்வரம், பிப்.11:  ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பயின்ற எண்.1 அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான சுவரில் சித்திரம் வரையும் போட்டி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்ற போட்டியில் 7ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வண்ண ஓவியங்களை சுவரில் வரைந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனர். மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் கல்வித்துறை அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் அறிவிக்கப்படும் என தலைமை ஆசிரியை தெரிவித்தார்.

Tags : Kalam School ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு